அ, உ, க, ப -ஆகிய எழுத்துகளை ஒலித்துப் பாருங்கள். வாயைத் திறந்து ஒலித்தாலே. அ என்னும் எழுத்து ஒலிக்கிறது. உ என்னும் எழுத்தை ஒலிக்கும்போது இதழ்கள் குவிகின்றன. நாக்கின் முதற்பகுதி மேல் அண்ணத்தில் ஒட்டும்போது க என்னும் எழுத்து பிறக்கிறது. ப என்னும் எழுத்து இதழ்கள் இரண்டும் ஒட்டுவதால் பிறக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு எழுத்துக்கும் பிறக்கும் இடமும் பிறக்கும் முயற்சியும் வெவ்வேறாக உள்ளன.
பிறப்பு
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர். எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு , முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர்.
இடப்பிறப்பு
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
முயற்சிப் பிறப்பு – உயிர் எழுத்துகள்
- அ, ஆ ஆகிய இரண்டும் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன .
- இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.
- உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்தும் வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன.
முயற்சிப் பிறப்பு – மெய் எழுத்துகள
- க், ங் – ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
- ச், ஞ் நாவின் இடைப்பகுதி, நடு அண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
- ட், ண் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
- த், ந் மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன
- ப், ம் – ஆகிய இருமெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.
- ய் இது நாக்கின் அடிப்பகுதி, மேல் வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதால்
பிறக்கிறது.
- ர், ழ் – மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
- ல் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
- ள் – மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.
- வ் – மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது.
- ற், ன் – மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.
சார்பெழுத்துகள்
ஆய்த எழுத்து வாயைத்திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது. பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.
சுய மதிப்பீடு
எழுத்துகளின் பிறப்பு
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறு வேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன
மெய் எழுத்துகளின் இடப்பிறப்பு :
- வல்லின மெய்கள் க் ச்ட்த்ப்ற் ) – மார்பு
- மெல்லின மெய்கள் (ங் ஞ் ண் ந்ம்ன் ) – மூக்கு
- இடையின மெய்கள் (யார் ல் வ் ழ் ள்) – கழுத்து
ழகர, லகர, ளகர மெய்களின் பிறப்பு
- ழகரம் – மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும்.
- லகரம் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கும்
- ளகரம் – மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கும்.
மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
சேவல் கூவும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூக்கொய்ய நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்தவுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக் கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைப் பருகி விட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்
சொல் சொக்கட்டான்
ஆய்தம் – இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும் அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக.
எழுத்துக்கள் | ஆ | ய் | த | ம் |
வகை | உயிர் | இடையினம் | வல்லினம் | மெல்லினம் |
பிறக்கும் இடம் | கழுத்து | கழுத்து | மார்பு | மூக்கு |
பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக.
கல், பூ, மரம், புல், வாழ்த்து , சொல், மாதம், கிழமை, ஈ, பசு, படம், பல், கடல், கை, பக்கம், பா..
கள் | க்கள் | ங்கள் | ற்கள் |
வாழ்த்துககள் | பூக்கள் | மரங்கள் | கற்கள் |
கிழமைகள் | ஈக்கள் | மாதங்கள் | புற்கள் |
கடல்கள் | பசுக்கள் | படங்கள் | சொற்கள் |
கைகள் | பாக்கள் | பக்கங்கள் | பற்கள் |
ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக
- படி – அவன் நன்றாக படித்து படிப் படியாய் முன்னேறி உயர்நிலையை அடைந்தான்.
- ஆறு – ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
- திங்கள் – மார்கழித் திங்கள் மதிகொஞ்சும் திங்கட்கிழமை காலை நீராடி உந்தன் தாழ் பணிந்தோம்
சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக
- வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து
வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும்
- உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.
உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.
- வென்றதை பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.
பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
- கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.
உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
- ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது.
அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ்.
கலைச்சொற்கள் தெளிவோம்
- ஒலிப்பிறப்பியல் – Articulatory Phonetics
- மெய்யொலி – Consonant
- மூக்கொலி – Nasal consonant sound
- கல்வெட்டு – Epigraph
- உயிரொலி – Vowel
- அகராதியியல் – Lexicography
- ஒலியன் – Phoneme
- சித்திர எழுத்து – Pictograph
நினைவூட்டல்
- எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர்.
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- இடையின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
- நாவின் முதற்பகுதி அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் க், ங்
- நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் ட், ண்.
- மேல் வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் த், ந்.
- மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் ப், ம்.
- நாக்கின் அடிப்பகுதி, மேல் வாய் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்து ய்.
- மேல் வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும் எழுத்துகள் ர், ழ்.
மேல் வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் நெருங்குவதால் பிறக்கும் எழுத்து ல். - மேல் வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கும் எழுத்து ள்.
- மேல் வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து வ்.
- மேல் வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் ற், ன்.
- வாயைத் திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கும் எழுத்து ஆய்த எழுத்து.
- ஆய்த எழுத்து சார்பெழுத்து வகையைச் சார்ந்தது.
- மொழியைப் பிழையில்லாமல் பேசுவதற்கும் எழுதுவதற்கும் துணை செய்வது இலக்கணம்.
- தமிழ் எழுத்துகள் மொத்தம் 247
- தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்.
- உயிர் எழுத்துகள் மொத்தம் பன்னிரண்டு.
- மெய் எழுத்துகள் மொத்தம் பதினெட்டு.
- ஆய்த எழுத்து ஒன்று.
- உயிர்க்குறில் இ, உ, எ, ஒ.
- உயிர்நெடில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ.
Add comment